search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ட்ஸ் விழிப்புணர்வு"

    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    போட்டியை கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, ஜெ.என் சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி டீன் சரஸ்வதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் கவுரிசங்கர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, காரைக்காலில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான்போட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    • எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தொடங்கி வைத்தார்.
    • எச்.ஐ.வி நிலையை அறிந்திட டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

    செம்பட்டி:

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா அறிவுறுத்தலின் பேரில் எய்ட்ஸ் இல்லாத தமிழகம் 2030 என்ற இலக்கை நோக்கி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தொடங்கி வைத்தார்.

    அதன்பின்னர் செம்பட்டி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் எச்.ஐ.வி தொற்றுள்ளோரும் நம்மில் ஒருவரே மற்றும் எச்.ஐ.வி நிலையை அறிந்திட டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி நம்பிக்கை மைய ஆற்றுனர் கண்ணன் மற்றும் ஆய்வக நுட்புநர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • விதவை/கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
    • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்கள் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் கலெக்டர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும் 2 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு விதவை/கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் பல்லவி வர்மா ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், மாவட்ட திட்ட மேலாளர்கள் (பொறுப்பு) ஹரிஹரகுகன், (பொறுப்பு) சிவக்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் பணியாளர்கள், இலக்கு மக்களுக்கான தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×